சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1374 மாநகராட்சி கவுன்சிலர், 3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு தேர்தல் பிப்ரவரி 19ந்தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி பிப்ரவரி 4ந்தேதி நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று உள்ளாட்சி தேர்தலுக்காக விறுவிறுப்பாக நடந்து வந்த வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. பல இடங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வரிசையில் காந்திருந்து தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கல் முடியும் நேரம் மாலை 5மணி என்பதால், 5 மணிக்குள் வந்தர்வகளுக்கு டோக்கன் வழங்கி மனுக்கள் பெறப்பட்டன.

மாநகராட்சி தேர்தலுக்கு 6,818 பேரும், நகராட்சி தேர்தலில் போட்டியிட 12,171 பேரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் இதுபோன்று பேரூராட்சி தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் 20,847 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், மொத்தம் 60ஆயிரத்துக்கு மேற்பட்டோர்வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவக்கின்றன.

இந்த நிலையில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்பட மொத்த்ம்  649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான  வேட்புமனு பரிசீலினை  இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று 10 மணிக்கு வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்குகிறது. இப்பணிகளை சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் அளிக்காமல், நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும். பரிசீலனையின்போது வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சார்பாளர்கள் சமூக இடைவெளி விட்டு இருப்பதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என்று அனைத்துமாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையர்வெ.பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

வேட்பு மனுக்களை திரும்பப்பெற பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.