டெல்லி: மத்திய அமைச்சரான ரத்தன் லால் கட்டாரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந் நிலையில் மத்திய அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளேன். கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.