நிலக்கரி சுரங்கம் அமைக்கும் இடங்களின் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை நீக்கியது மத்திய அரசு.

தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்ட மத்திய நிலக்கரி அமைச்சகம் மார்ச் 29 ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டது.

நாட்டின் 101 ஒன்றியங்களில் நிலக்கரி சுரங்கம் தோண்ட விடப்பட்ட டெண்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு சேத்தியாத்தோப்பு, அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மைக்கேல்பட்டி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி ஆகிய மூன்று ஒன்றியங்களும் அடங்கும்.

மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்த தன்னிச்சையான அறிவிப்பால் தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மக்களிடையே அச்ச உணர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் நிலக்கரி சுரங்கம் அமைக்க விடப்பட்ட டெண்டரில் திருத்தம் செய்துள்ள மத்திய நிலக்கரி அமைச்சகம் தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள மூன்று ஒன்றியங்களையும் அந்த பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

“நிலக்கரி அமைச்சகத்தின் தன்னிச்சையான நடவடிக்கை தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும்” பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்