லண்டன்; இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அவ்வாறு வருபவர்கள், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருந்தும் ஏராளமானோர் அதிகரித்து வருகின்றனர். மேலும், சிறிய படகுகளில் சட்டவிரோதமாக கடக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் கணிசமான அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உளளது.

சிறிய படகுக;ள மூலம் ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து கரைகளில் இறங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2021ல் 67 பேர் இருந்த நிலையில், 2022ல் 683 இந்தியர்கள் சிறிய படகுகளில் யுனைடெட் கிங்டமிற்கு வந்துள்ளதாக உள்துறை அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு சட்ட விரோதமாக நுழைவோரை திருப்பி அனுப்பும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், செர்பியா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

சட்ட விரோதமாக நுழைபவர்கள் தஞ்சம் கோரமுடியாது எனக்கூறிய அவர், போலியான மனித உரிமைகளையும் முன்வைக்க முடியாது என தெரிவித்தார்.