திருப்பதி: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மார்ச் 21, 22ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு   தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக  இலவச தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசனங்களும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,   தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு விஐபி தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு தெலுங்கு வருட பிறப்பு மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

தெலுங்கு வருடப்பிறப்பின்போது பல்வேறு சிறப்புபூஜைகள் நடைபெறும் என்பதால்,  வரும் 21 மற்றும் 22ஆம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தெலுங்கு வருட பிறப்பு அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் நடைபெறும். காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். காலை 7 மணி முதல் 9 மணி வரை கொடிமரத்தை சுற்றி சாமி வீதி உலா நடைபெறுகிறது. மேலும் யுகாதியை முன்னிட்டு பூஜை நடைபெறும் அன்று கோயில் முழுவதும் வண்ண மிண்விளங்குகுள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வண்ண மலர்கள் கொண்டு பெருமாளுக்கு அலகார செய்யப்படும்.

மேலும், கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோத்சவம், சஹசர தீபாளங்கர சேவை உள்ளிட்ட ஸ்ரீவாரி அர்ஜித சேவையும் இம்மாதம் முழுவதும் நடைபெறும். https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது.

இந்j நிலையில், யுகாதி மற்றும் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி மார்ச் 21,22 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.