சென்னை

தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். 

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகர், திருவல்லிக்கேணி பகுதி மக்களுக்கு தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். அவர் அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது பதிலில்.,

” சென்னையில் ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.. 

மக்களவையில் புகைக் குண்டு வீசியவர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயக படுகொலை ஆகும்.

பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டியுள்ளது. அவர் எப்பொழுதாவதுதான் நாடாளுமன்றம் வருகிறார். அதனால் பாதுகாப்பை விட்டு விட்டனர் போல உள்ளது” 

என்று கூறி உள்ளார்.