திருக்குவளை

திருக்குவளையில் தி மு க சார்பில் தேர்தல் பிரசாரம் செய்த இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக சார்பாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.  இன்று காலை அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தி விட்டு பிரசாரத்தைத் தொடங்கினார்.

அவர் திருக்குவளை சென்று அங்குள்ள கருணாநிதி இல்ல வாசலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிரசாரம் செய்தார்.  அவர் தனது பிரசாரத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதல்வர் ஆவார்.  மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டியது போல் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்” எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து தடையை மீறித் தேர்தல் பிரசாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவருடன் பிரசாரக் கூட்டத்தில் பங்கு பெற்ற கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.