சென்னை

மிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 12 தமிழக விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 32 லட்சம் வழங்கியுள்ளார்.

வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் உலக அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான எப்ஐஎஸ்யு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஏஞ்ஜெல் சில்வியா, வீரர்கள் ஜெரோம், அஸ்வின் கிருஷ்ணன், ரீகன், கூடைப்பந்து வீரர் சங்கீத் குமார், வீராங்கனை தேஜ, சுகந்தன், கையுந்துபந்து வீராங்கனைகள் ஆனந்தி, சுஜி, கனிமொழி, வீரர் அபிதன், வாள்வீச்சு வீராங்கனை கனகலட்சுமி என 12 வீரர், வீராங்கனைகளுக்கு செலவினத்தொகையாக மொத்தம் ரூ.32.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழக துணை முதல்வர்ர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

இதைத் தவிர தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 9 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.4.80 லட்சம் மதிப்பிலான நவீன விளையாட்டு உபகரணங்களையும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உள்ளார்.