சென்னை

சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும். வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதால் காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுஇதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டது.

கடந்த 9ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  சோதனையில் இந்த மிரட்டல் உண்மை இல்லை எனக் கண்டறியப்பட்டது

தற்போது சென்னை சேப்பாக்கம்  கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கிரிக்கெட் சங்கத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.

தமிழக கிரிக்கெட் சங்கத்தினர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், போலீசார் மோப்பநாய் உடன் சேப்பாக்கம் மைதானத்தில் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.