சென்னை:

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான ராணிமேரி கல்லூரியில் சீலிடப்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

அந்த அறையை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தேன். வாக்காளர்களுக்கு என் அன்பும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.