இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு ‘உடன்பிறப்பே’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சூர்யா தயாரித்து வந்த இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள். இது ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 50-வது படமாகும்.

இந்தப் படம் அக்டோபரில் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று சூர்யா அறிவித்துள்ளார். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.