பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனச் சரகத்தில் 2 புலிகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, திருப்பூா் என 2 கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, உடுமலை ஆகிய 6 வனச் சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

அங்கு, புலி, சிறுத்தை, யானை, செந்நாய், ராஜநாகம் உள்ளிட்ட பல்வேறு அரிய உயிரினங்கள் உள்ளன. பொள்ளாச்சி வனச் சரகத்தில், போத்தமடை பீட் பகுதியில் 2 கி.மீ. இடைவெளியில் 8 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் புலியும், 8 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புலியும் இறந்து கிடந்தன.

உயிரிழந்துள்ள 2 புலிகளின் உடலிலும் பெரிய காயங்கள் எதுவும் இல்லை. ஆரோக்கியமாக இருக்கும் அவை நோய் வாய்ப்பட வாய்ப்புகள் குறைவு என்று வனத்துறையினா் தெரிவித்துள்ளனர்.