டில்லி,

ரட்டை இலை முடக்கம் தொடர்பாக வரும் அக்டோபர் 6ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  அப்போது அதிமுக அணிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் அறுவுறுத்தி இருந்தது.

இதற்கு அவகாசம் கேட்டு டிடிவி தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது.

இந்நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்ததும், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மதுசூதனன், பன்னீர் செல்வம், வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில்,

இரட்டை இலை சின்னம் சர்ச்சை தொடர்பாக புதிதாக ஆவணங்கள் தாக்கல் செய்ய விரும்பி னால் செப்டம்பர்.29-ம் தேதிக்குள் தகுந்த ஆதாரங்களுடன் தாக்கல் செய்யலாம். அதன் நகலை எதிர் தரப்புக்கும் அளிக்க வேண்டும்.

இந்த ஆவணங்களில் கட்சியின்,எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட வேண்டும். மேலும், 2016 டிச.5-ம் தேதியன்று கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியலை அவர்களது ஒப்புதலுடன் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் அனைத்தையும் செப்டம்பர்.29-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் அக்டோபர். 6-ம் தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடக்கும்.

அதில் நேரிலோ அல்லது அத்தாட்சி பெற்ற வழக்குரைஞர்களோ பங்கேற்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

ந்நிலையில் தேர்தல் ஆணையம் கேட்ட கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், டிடிவி தினகரன் தரப்புக்கு அவகாசம் அளிக்க தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது.

இரட்டை இலைச்சின்னம் தொடர்பான விசாரணை திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

அதையடுத்து இரட்டை இலை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என தெரிகிறது.

தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பு டிடிவிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.