தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, *செண்பக வல்லி அம்மன் கோவில்

சாத்தூர் தாலுகாவை சார்ந்த சிற்றூராக இருந்த கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் வருவாய் தரும் தொழில் சார்ந்த நகரமாக விளங்குகிறது. இவ்வூருக்கு கோயிற்புரி, திருப்பூவனம், பொன்மலை, கோயில்புரி என்றெல்லாம் பெயர் விளங்குகிறது.சிற்றூராக இருந்துவந்த இவ்வூரானது இன்று ஒரு சிறப்பு நிலைநகராட்சியாகத் திகழ்கிறது. பல வகைகளிலும் சிறப்புப் பெற்ற பல ஊர்கள் செண்பக வல்லியம்மன் கோவில் திருத்தலத்தை சுற்றிலும் அமைந் துள்ளது தனிச் சிறப்பான ஒன்றாகும்.

சுமார் 20 கி.மீ. தொலைவில் இருக்கின்ற வெம்பக் கோட்டையை அரசாண்ட செண்பக மன்னன், களாக் காட்டினை வெட்டித் திருத்தி கோயிலும், ஊரும் எழுப்பித்தான் என்று இக்கோயில் தல வரலாறு சொல்கிறது. இவ்வூரி லிருந்து சுமார் 5கி.மீ. தொலைவில் இருக்கின்ற மந்தித்தோப்புசங்கராபதி திருமடத்தில் உள்ள செப்புப் பட்டையம் மூலமாக இவ்வூரானது கலி 4131க்கு முற்பட்டது என்று அறியமுடி கிறது. அதேபோல் இத்திருக் கோயிலை உள்ள முடையான் என்னும் அரசன் புதுப்பித்த ஆண்டை சகனாண்டு 1100 என்று கோயில்புரி புராணத்தின்மூலமாக அறிய முடிகிறது.

புராணச் சிறப்பு…

ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்து மூன்று முப்பத்து நாலாம் (1934) ஆண்டுகளில் இத் திருக்கோயில் பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் ஆகியவை பிரதிஷ்டை செய்யப் பட்டதற்கான கல்வெட்டுக் கள், தூண்கள் மற்றும் வாயில்கள் நிறுவப் பட்டதற்கான கல்வெட்டுக் களும் ஆங்காங்கே காணப் படுகின்றன. இத்திருக் கோயில் முழுவதும் கல்வெட்டுக் களினால் கட்டப் பட்டுள்ளதால் இரண்டாம் நரசிம்ம வர்மன் (கி.பி.700) காலத்திற்கு பிற்ப்பட்ட தாகவும் கருதப் படுகிறது.

மேலும் சிவஞான யோகிகள் இயற்றிய கோயில்புரி புராணத்தில் இப்புராண வரலாறுகள் தொகுத்துக் கூறப் படுகின்றன. 18படலங்கள் கொண்ட இந்நூலில் முதல் 16 படலங்களில் இவ் வரலாறுகள் கூறப் பட்டுள்ளன.

சிவனாரின் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணை யில்லா ஈசன் திருமணம் காண யாவரும் வந்து ஒருங்கே கையிலை மலையில் கூடியதால் உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. செண்பக வல்லியம்மன் திருக்கோயில் தலவரலாறு:- அகத்தியரை இறைவன் பணித்தார். அவ்வண்ணம் தென்புலத் திசையில் உள்ள பொன்மலை என்னும் இவ்விடத்தில் களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந் தருளியுள்ள ஈசன்பூவன நாதரை வழிபட்டு விட்டு தவமியற்றி வந்த முனிவர் களைக் கண்டார்.

அம்முனி வர்களின் வேண்டு கோளுக் கிணங்க சிவலிங் கத்திற்கு வடகிழக்கில் பொன் மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடிவரலா யிற்று .அதுவே அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப் பட்டு பின்னர் அதுவே இத்திருக் கோயிலின் திருக் குளமாகவும் காட்சியளிக் கின்றது.-

முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் என்னும் இரு பாம்புத் தலைவர் களுக்கு சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்றஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்கவடிவில் எழுந்தருளிஇருந்த ஈசனைப் பூ வனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்களுக்கு முன் தோன்றிய இறைவன் இன்றுமுதல் இச்சிவலிங் கம் பூவனநாதர் என்று அழைக்கப் படுவார். புன்னைக் காவலில் (சங்கரன் கோவில்) உங்கள் ஐயம்தீர்க்க சிவன் பெரியவன், திருமால் பெரியவளாகி (எம் மனைவி) காட்சியளிப்போம் என்றுரைத் தார்.

மூர்த்தியின் சிறப்பு…

இத்திருக் கோவிலில் வீற்றிருக்கும் அன்னை செண்பக வல்லி 7அடி உயரத்தில் நின்ற நிலையில் எழில் கொஞ்சும் வடிவில் காட்சித் தருகின்றாள். இப்பகுதி வாழ் மக்கள் வேண்டியதை அருள்கின்ற வேண்டுதல் தெய்வமாக காட்சி தருகிறாள். தன்னை சரணடைந்த மக்கள் துயர்நீக்கும் தெய்வ மாகவும், அவர்களின் வேண்டுதல் களை எல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகவும் காட்சித் தருகிறாள்.

அம்பாளின் பெயரையே தங்கள் குழந்தை களுக்குச்சூட்டி வாழ்கின்ற நிலையும் இப்பகுதியில் அதிகமாக காணப் படுகின்றது. எல்லாருக்கும்அருள் பாலிக்கின்ற செண்பக வல்லியம்மன் மீது கோவில்பட்டி நீலமணியும் இன்னும் பாடல்கள் பாடியுள்ளனர். கோவில்பட்டி நீலமணியோசெண்பக வல்லி அருள்மாலை, செண்பக வல்லி நூற்றந்தாதி என்னும் இரண்டு நுல்களை எழுதியுள்ளார். இதில் செண்பக வல்லி அருள்மாலை 5ம் பதிப்பு வரை வெளி வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.