திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே டியூசனுக்கு வந்த 16வயது மைனர் மாணவனுக்கு ஆசிரியை மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

100 சதவிகிதம் கல்வியறிவு பெற்றுள்ள கேரள மாநிலத்தில்தான் புதுப்புது வகையான நோய்களும், பாலியல் பழக்க வழக்கங்களும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை நடைபெற்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில், அடுத்தடுத்து வெளிவந்த பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளின்  காம களியாட்டங்கள்  பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.  கன்னியாஸ்திரிகள் பாதிரியார்களுடன் தவறான உறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவது, கிருஸ்தவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், சர்ச்சுகளுக்கு வரும் பெண்கள் மிரட்டப்படுவது போன்று கிருஸ்தவ நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களைப் பற்றி கிருஸ்தவ பெண்களின் மனக்குமுறலை கிறிஸ்தவ சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா என்பவர் “கர்தாவின்ட நாமத்தில்”(கிறிஸ்துவின் பெயரால்) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில்,  கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனை அவனுக்கு டியூசன் எடுத்து வந்த ஆசிரியை ஒருவர் மதுகொடுத்து, அந்த மாணவனை வன்புணர்வு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பாதிப்பு உள்ளான மாணவர்ன  கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதையறிந்த மாணவனின் பெற்றோர், அவனிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அவன் எதற்கும் பதில் சொல்லாமல் சோர்வாக பயத்துடனே இருந்து வந்துள்ளான். இதுகுறித்து அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது, அந்த மாணவன், சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள தேர்வுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளது தெரிய வந்தது. அதனால்தான்அவன்  சக மாணவர்களுடன் பழகாமல் ஒதுங்கியே இருந்துள்ளான் என்று நினைத்துக்கண்டனர்.

ஆனால், ஆக்டிவாக இரு;ககும் மாணவன் என் திடீரென சோர்வடைந்துள்ளான் என சந்தேகப்பட்ட பள்ளி ஆசிரியர்களும், அவனை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து விசாரித்துள்ளனர். அப்போதுதான், அந்த மாணவனின் பாதிப்புக்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதிக மதிப்பெண் பெறுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்றுள்ளான். அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, அதனை மறந்து அந்த 16 வயது மாணவனக்கு  மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார்.

மாணவன் கூறிய தகவலைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம், இதுதொடர்பாக  மண்ணுத்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையை கைது செய்தனர்.