கோழிக்கோடு: தலைமுடி கொட்டுவதற்கு சிகிச்சை எடுத்து வந்த கேரள இளைஞர், முடி கொட்டுவது மேலும் அதிகரித்த நிலையில், தனது மரணத்துக்கு மருத்துவரே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பிரசாந்த். தலைமுடி கொட்டும் பிரச்சனைக்காக மருத்தவ சிகிச்சை எடுத்து வந்த இளைஞர் அதற்கான மருந்து சாப்பிட்டு வந்த நிலையில் பயனளிக்காததால் தன்னுடைய இந்த நிலைக்கு மருத்துவரே காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

விசாரணையில், தனது  திருமணத்திற்கு முன்பு  தலைமுடி உதிர்வதை தடுக்க சிகிச்சை எடுத்து வந்த பிரசாந்த் (26) இளைஞருக்கு, மருந்து ஒத்துக்காத நிலையில், அவருக்கு மேலும் தலை முடி உதிர்ந்தது மட்டுமல்லாமல் கண்ணுக்கு மேலே உள்ள  புருவத்தில் உள்ள முடியும் உதிர்ந்ததால்  அதிர்ச்சி அடைந்தார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக முடிக்காக சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு சிகிச்சையில் போதிய பலன் கிடைக்காத நிலையில், மேலும், புருவ முடியும் உதிர்ந்ததால், அதிர்ச்சி அடைந்தவர், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மேரும், தனது தற்கொலை காரணம், மருத்துவர்தான் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலைக்கு செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.