சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,24) எண்ணப்பட்டதில் 19 வது சுற்றில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் 89 ஆயிரத்து 13 ஓட்டுக்கள் பெற்று 40 ஆயிரத்து 707 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 2 வது இடத்தையும், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 3 வது இடத்தையும் பெற்றனர். மதுசூதனனை தவிர திமுக, பா.ஜ., உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டிபாசிட் இழந்தனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் மொத்தம் 1,76,885 ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்கள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

தபால் ஓட்டு போட மொத்தம் 4 பேர் பதிவு செய்ததில், ஒருவர் மட்டுமே ஓட்டளித்தார். பதிவான ஒரு தபால் ஓட்டை திமுக பெற்றது.