டெல்லி:

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரனை 15 நாள் சிறையில் அடைக்க டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த வாரம் தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 5 நாட்கள் அவரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று தினகரனை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவரை வரும் 15ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் காலங்களில் அவரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தினகரன் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.