ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சரவணன். சாலை விபத்தில் சிக்கி, சில காலம் ஓய்வில் இருந்தார்.

இவருக்கு உதவும் வகையில் தன் கதையை அவருக்கு கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இக்கதையில் நடிக்க த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. தற்போது த்ரிஷாவுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.