சேலம்: திருச்சி மாவட்ட ஆட்சியர் கார் சேலம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் கார் டிரைவர் காயமடைந்தார். ஆனால், திருச்சி ஆட்சி  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு  திரும்பிய போது  சேலம் அருகே திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

சேலம் அடுத்த சீலநாயக்கன்பட்டியில்  ஆட்சியரின் கார் விபத்தில் சிக்கியது. இதில் கார் ஓட்டுனருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ஓட்டுநர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்சியர் சிவராசு அதிர்ஷ்டவசமாக  காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.