திருவாரூர்:

ரசுபோக்குவரத்துக்கழக ஓட்டுநர், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை முயற்சி செய்தது திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையைச் சேர்ந்தவர் பிரபாகரன். அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். இந்த நிலையில் இன்று விசம் அருந்திய நிலையில் தனது வீட்டில் மயங்கிக்கிடந்ததாக சொல்லப்படுகிறது.   கந்து வட்டிக் கொடுமை தாளாமல் அவர் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.

அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஓட்டுநர் பிரபாகரனின் தற்கொலை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது