சென்னை

சென்னையில் ஒரே சீட்டு முறை கொண்டு வரக் கோரி தெற்கு ர்வ்யில்வேக்கு ஒருங்கிணந்த போக்குவரத்துக் கழகம் க்டிதம் எழுதியுள்ளது.

தினந்தோறும் சென்னையில் ஏராளமான மக்கள் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் என மூன்றுக்கும் ஒரே டிக்கெட் எடுத்துப் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்குக் கொண்டு வர உள்ளது.

தெற்கு ரயில்வேக்கு ஒரே டிக்கெட் முறையைக் கொண்டு வரும் திட்டம் தொடர்பாகச் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடித்த்தில்

”சென்னை புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுத்த ஒரு மணி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய வேண்டும். .தவிர ஒரே டிக்கட் முறையை அமல்படுத்த வேண்டும்.  மேலும் டிக்கெட் எடுத்த 6 மணி நேரம் அல்லது 12 மணி நேரத்திற்குள் பயணம் செய்யலாம் என விதியை மாற்றம் செய்ய வேண்டும்” 

என்று அவர்  தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வே சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.