சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 7 மாவடங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என முன்னதாக தெரிவித்து இருந்தது.

தற்போது சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தென்காசியில் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தவிர திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.