ஞ்சாவூர்

டைபெற உள்ள மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாகச் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.  செய்தியாளர்கள் சீமானிடம் பல கேள்விகளை எழுப்பினர்.

சீமான் அதற்கு,

“பாஜக மற்றும் அதிமுக இடையிலான  கூட்டணி பிரிவை தற்காலிக பிரிவாகப் பார்க்கவில்லை. நிரந்தர பிரிவாகப் பார்க்கிறேன். அண்ணாமலை இதுகுறித்து தலைமை பேசும் என அண்ணாமலை கூறியுள்ளார். நமக்கு  இதற்கு முன்னர் அண்ணாமலை பேசியது எல்லாம் தலைமையின் உத்தரவு தானா என்ற கேள்வி வருகிறது.

தமிழகத்துக்கு உரிமையான காவிரி நதி நீரை உரிய அளவில் தர மறுத்து வரும் கர்நாடக அரசு, நீதிமன்ற உத்தரவுப்படி திறந்துவிடும் சொற்ப நீரையும் திறக்கக் கூடாது எனக் கன்னட அமைப்புகள் போராடி வருவது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சரை அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது,

வருகிற மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுமா, கூட்டணி சேர்ந்து போட்டியிடுமா எனக் கேள்விகள் எழுகின்றன. நங்கள் நிச்சயம் போட்டியிடுவோம் , கூட்டணி இன்று தனித்துப் போட்டியிடுவோம்”

என்று பதில் அளித்தார்.