புதுச்சேரி:

ற்கொலையை தூண்டும் வகையில் ஆன்லைன் மூலம் விளையாடப்படும் புளுவேல் விளையாட்டுக்கு புதுச்சேரி கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று தமிழகத்தில் மதுரை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு தற்கொலை இந்த கொடூர விளையாடு காரணமாக நிகழ்ந்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது செல்போனை எடுத்துப் பார்த்ததில் அதில் உயிரைக் குடிக்கும் ப்ளூவேல் கேம் லிங்க் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ப்ளூவேல் விளையாட்டிற்கு பல மாநிலங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாடு முழுவதும் ஏராளமானோர் தற்கொலை செய்துள்ள நிலையில், சமீபத்தில் இதற்கு காரணமாக அட்மின் ஆக செயல்பட்ட 17 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.