திண்டுக்கல்: மழையின் காரணமாக சுவற்றில் மின்சாரம் பாய்ந்தால், அதைத் தொட்ட தந்தை மற்றும் இரு மகன்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.  திண்டுக்கல் பகுதியில் நல்ல மழை பெய்தது.

சம்பவத்தன்று திண்டுக்கல் அருகே உள்ள செட்டியபட்டி எனும் பகுதியிலும் வசித்துவரும் திருப்பதி என்பவரின் வீட்டில் மின்சார வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக,  சுவரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. மழையினால் சுவர் ஈரமாக இருந்தால், சுவர் முழுவதும் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்தது. இதை அறியாமல், அந்த வீட்டில் வசித்து வந்த திருப்பதி (வயது 45) என்பவர் சுவரை பிடித்துள்ளார். அவர்மீது மின்சாரம் பாய்ந்ததால், அவல் அலறியடித்துள்ளார். அவரை காப்பாற்றச்சென்ற அவரது  மகன்கள் இருவரும் மீதும் மின்சாரம் பாய்ந்ததால், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தந்தையை காப்பாற்ற சென்று உயிரிழந்த இரு மகன்களும் பள்ளி மாணவர்கள் என்பதும், மூத்த மகன் விஜய் கணபதிக்கு 17 வயது என்றும், இளையமகன் சந்தோஷ்குமாருக்கு  15 வயது என்றும் கூறப்படுகிறது. மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.