சென்னை:
திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும் அத் தொகுதியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி அவர் ஒரு வாரமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.