திருநெல்வேலியில்  சில பகுதிகளில்  இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,

“திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் .

கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானுர் மற்றும் மூலைக்கரைப்பட்டி உபமின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானாங்குளம், மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், நரியூத்து, அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி, மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:

அதேபோல் கங்கைகொண்டான் உபமின் நிலையத்தில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. அதன்படி சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.