சென்னை:

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை இல்லை. வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி அன்று எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுது. இந்த செய்தி தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மாணவ மாணவிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டின் அறிவிப்பு தான் தற்போது உலா வருகிறது. அதனால் இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம். நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.