ய்ஸ்வால்

நாளை மிசோரம் மாநிலத்தின் முதல்வராக லால் துஹோமா பதவி ஏற்கிறார்.

மிசோரம் மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. இ;கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. மேலும் பாஜகவுக்கு 2 இடங்களும் காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைத்தது.

நேற்று முன்தினம் ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வராக அக்கட்சித் தலைவா் லால் துஹோமா தேர்வு செய்யப்பட்டார். பிறகு மாநில ஆளுநர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

நாளை மாநில முதல்வராக லால் துஹோமா பதவியேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது 74 வயதாகும் லால் துஹோமா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.. இவர் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.