சென்னை:

மிழகத்தில் நாளையுடன்  வேட்பு மனு தாக்கல் தேதி முடிவடைய உள்ளதால், இன்று தமிழகம் முழுவதும் திமுக,அதிமுக உள்பட அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தென்சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் முதல்  தூத்துக்குடி யில் போட்டியிடும் கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் உள்பட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள், திருமாவளவன் என ஏராளமான வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாக உள்ள நிலையில் வேட்பாளர்கள் பலர் இன்று மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மத்திய சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

குப்பல்ஜி தேவதாஸ் என்ற சுயேட்சை வேட்பாளர் தென் சென்னை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கான தொகையை சில்லரை காசுகளாக அவர் கொண்டு வந்திருந்தார்.

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, வள்ளலார் நகரிலுள்ள மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை வழங்கினார்.

தஞ்சாவூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனுத் தாக்கல் செய்தார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் திருநாவுக்கரசர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்   ஈவிகேஎஸ் இளங்கோவன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் என்ற இதயவர்மன் வேட்புமனுத் தாக்கல்

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தி.மு.க கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவருமான வே. சாந்தாவிடம் வேட்பு மனு அளித்தார்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான தமிழிசை சவுந்திரராஜன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு அளித்தார்.

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் H. ராஜா, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயகாந்தனிடம் வேட்புமனுவை வழங்கினார்.

திருச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன, மாவட்ட ஆட்சியரான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை அளித்தார்.