நெல்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகள் தொடர்வ்தா நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளடு

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியதல் அதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், நெல்லை , தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ளம் தற்போது வடிந்து வருகிறது என்றாலும் மக்கள் பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீளவில்லை.

நாளை நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.