தூத்துக்குடி

நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வெள்ளம்

தற்போது வடிந்து வந்தாலும் மக்கள் பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீளவில்லை. ஏற்கனவே நெ;;ல்லை மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (21.12.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெள்ள பாதிப்பு காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.