சென்னை:

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நாளை கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நாளை கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர்.