விழுப்புரம்

விழுப்புரம் நீதிமன்றத்தில் நாளை பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அனுமதியை மீறி விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தற்போது இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.  , இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேரும் ஆஜராகினர்.

ஆனால் மற்ற 3 பேரும் ஆஜராகவில்லை. திமுக வழக்கறிஞர்கள் அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுத்தாக்கல் செய்தனர். எனவே, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், இவ்வழக்கின் விசாரணை மீண்டும் 28-ந் தேதி  நடைபெறும் என உத்தரவிட்டுள்ளார்.