சென்னை

நாளை தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. 

நேற்று முன் தினம் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு. நாளை (திங்கட்கிழமை) 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

இவர்களைத் தவிர தனித்தேர்வர்களாக 5 ஆயிரம் பேரும், சிறைவாசிகளாக 187 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

இந்த தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும், தேர்வு பணிகளில் 46 ஆயிரத்து 700 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வின் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வுகள் நாளை தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.