சும்பொன்

ன்று பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா தொடங்க உள்ளது.

இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா தொடங்குகிறது. இந்த விழாவின் முதல் நாளான இன்று காலை 7 மணி அளவில் மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் ஆன்மிக விழா தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து சிறப்பு யாக பூஜை நடைபெற்று பாலகணபதி, பாலமுருகன், தேவர் திருமகனார் கோவில் ஆகியவற்றிற்கும் முதலாம் ஆண்டு வருசாபிஷேக பூஜையும் நடக்கிறது.  பூஜைகள் பிள்ளையார் பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றன.

தேவரின் வாழ்க்கை, வரலாறு புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைக்கிறார். இன்று மாலை 5 மணிக்குத் திருவிளக்கு பூஜையும், 7 மணிக்குத் தேவரின் தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.  நாளை விழாவின் 2 ஆம் நாள் பொதுமக்கள் மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

நாளை மறு நாள் முக்கிய நிகழ்ச்சியான ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் தலைமையில் நடக்கிறது. அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

விழாவை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், கண்காணிப்பு படக்கருவிகள் அமைத்தல், வாகன சோதனை மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்குத் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய காவலர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.