சென்னை

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.

அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.