சென்னை

மிழகத்தில்  இன்றைய (21/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,289 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,66,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,599 பேர் உயிர் இழந்து 8,46,480 பேர் குணம் அடைந்து தற்போது 7,903 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,41,623 பேர் பாதிக்கப்பட்டு 4,197 பேர் உயிர் இழந்து 2,34,441 பேர் குணம் அடைந்து தற்போது 2,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 57,132 பேர் பாதிக்கப்பட்டு 686 பேர் உயிர் இழந்து 55,759 பேர் குணம் அடைந்து தற்போது 687 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 54,347 பேர் பாதிக்கப்பட்டு 801 பேர் உயிர் இழந்து 52,796 பேர் குணம் அடைந்து தற்போது 750 பேர் சிகிச்சையில் உள்ளனர்.