கோஹிமா: நாகாலாந்தில் இன்று ரிக்டர் அளவுகோளில் 4.2ஆக பதிவாகியுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தின் தென்கிழக்கில் டியூன்சாங் பகுதியில் இன்று காலை 10.36 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் 21 நிமிடங்களுக்கு நீடித்தது.

நில அதிர்வில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தின் மையப்பகுதி மற்றும் ஆழம் ஆகியவை அடுத்த சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக கணக்கிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.