ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக எல்லை பாதுகாப்புப்படையின் ராஜஸ்தான் பிரிவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தானின் பிகானீர் எல்லைப் பாகுதியில் பாகிஸ்தானியரின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்திய பகுதியில் உள்ள வேலியின் முன்பாக சந்தேகத்துக்கிடமான வகையில் நபர் ஒருவரின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் அந்த நபர் கேட்காமல் முன்னேறினார். இதையடுத்து ஆபத்தை உணர்ந்த படையினர் அவரைச் சுட்டுக் கொன்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.