சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 559 பேரும் கோவையில் 1,227 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 9,118 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,97,864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 30,548 பேர் உயிர் இழந்து 22,66,793 பேர் குணம் அடைந்து தற்போது 1,00,523 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,27,835 பேர் பாதிக்கப்பட்டு 7,953 பேர் உயிர் இழந்து 5,15,199 பேர் குணம் அடைந்து தற்போது 4,683 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 1,227 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 1,041 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,09,481 பேர் பாதிக்கப்பட்டு 1,823 பேர் உயிர் இழந்து 1,94,838 பேர் குணம் அடைந்து தற்போது 12,820 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,53,095 பேர் பாதிக்கப்பட்டு 2,285 பேர் உயிர் இழந்து 1,48,337 பேர் குணம் அடைந்து தற்போது 2,473 பேர் சிகிச்சையில் உள்ளனர்.