மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,819, ஆந்திராவில் 232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,41,673 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 49,663 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,712 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 18,36,647 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 54,212 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரா மாநிலத்தில் இன்று 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 8,83,082 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 7,115 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 352 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,72,897 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 10,834 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திரா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.