ன்னியாகுமரி

ன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் எல் எல் ஏ ஆன முதக் நபர் வேலாயுதன் இன்று மரணம அடைந்தார்.

இன்று காலை மாரடடைப்பால் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் மரணமடநிதார்  இவர்பாஜக சார்பில் தென்தமிழகத்தில் இருந்து முதன் முறையாக வெற்றி பெற்றவர் ஆவார். தற்ப்போது அவருக்கு வயது 73. ஆகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி ஜெகதாம்பிகா இறந்து விட்டார்.  திருவனந்தபுரத்தில் மகன் வீட்டில் வசித்து வந்த வேலாயுதன், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் பா.ஜனதா நிகழ்ச்சிகள், கோவில் கும்பாபிஷேகங்கள், திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வது வழக்கம்.

ஒரு கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊரான கருப்புக்கோட்டுக்கு வந்திருந்த நிலையில், வேலாயுதனுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கருப்புக்கோடு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை 10 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.

வேலாயுதன் மறைவுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேலாயுதன் தனது 13-வது வயதில் 1963-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து 1982-ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த 1989 இல் அதாவது 39- வது வயதில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனது நிலத்தை விற்றும், கோவில்களில் உண்டியல் அமைத்தும் டெபாசிட் தொகையை கட்டி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.  அந்த தேர்தலில் அவருக்கு 4 ஆம் இடமே கிடைத்தது.

பிறகு 1991 சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியடைந்த வேலாயுதன், 3-வது முறையாக 1996 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் வேலாயுதன் தென்தமிழகத்தின் முதல் பாஜக சட்டமன்ற உறுப்பினராக தமிழக சட்டசபைக்கு சென்றார்.