சென்னை

ன்று தமிழக சடடசபை கூடடம் நிறைவடைகிறது, 

இந்த மாதம்  9-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவடைகிறது.  இன்றைய நிகழ்வின்போது வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன் வடிவு தாக்கல் ஆகிறது. இதை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட முன் வடிவும் இன்று தாக்கல் ஆகிறது.  இந்த ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட மின்வடிவைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார்.

இந்த சட்டசபை  கூட்டத்தொடரில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர்  மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர் மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.