பரிமலை

ன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆனி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்படுகிறது.

இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக  மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அப்போது தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார்.  இதைத் தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும்.

பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாகச் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இன்றைய தினம் மற்ற சிறப்புப் பூஜைகள் நடைபெறாது. மாறாகக் கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புறப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

நாளை 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.

வரும் 20-ந் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்குக் கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம் போல் இணையம் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.