ட்ச்

ன்று பிபோர்ஜாய் புயல் கரையைக் கடப்பதையொட்டி மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் இன்று (வியாழக்கிழமை) மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இங்கு 74 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்

பிபோர்ஜாய் புயல் காரணமாக நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருவதால் 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு 130 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இதையொட்டி தேசிய பேரிடர் மீட்புப்படையின 15 குழுக்கள், 12 மாநில பேரிட மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகக் குஜராத் நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார்.

புயல் இன்று மாலை வடகிழக்கு நோக்கி நகர்ந்து சௌராஷ்டிரா மற்றும் கட்ச், குஜராத்தின் மந்த்வி- பாகிஸ்தானின் கராச்சி அருகில் உள்ள ஜக்காவ் துறைமுகம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ராஜ்கோட், மொர்பி, ஜுனாகாத், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பகுதிகளில் அதிதீவிர மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.