சென்னை

ன்று தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்படுகிறத

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்  இயங்கி வருகின்றன. இங்கு இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆன்லைன் வழியாக அடுத்த மாதம்  2-ந் தேதி தொடங்க உள்ளது. ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 24-ந்தேதி வரை நடக்கிறது.

கடந்த மே 5 ஆம் தேதி பொறியியல் படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. தமிழ்காம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 1,87,693 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாகப் பதிவேற்றியுள்ளனர்.  சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

இன்று பொறியியல் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரேண்டம் எண் உருவாக்கப்படும் அதை இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். ஒரே மாதிரியாக கட்ஆப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும்.