மேட்டுபாளையம்

ன்று மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தையும் ஆதரவையும் அதிக அளவில் பெற்றுள்ள போக்குவரத்தில் ஊட்டி மலை ரயில் சேவையும் ஒன்றாகும்.   இந்த ரயில் மலைகளில் குகைகள் மற்றும் இயறகை காட்சிகள், பாலங்களில் செல்வதால் உள்ளூர் மற்றும் சரவதேச பயணிகள் இதில் செல்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடும் காற்று மற்றும் கனமழை உள்ளது.  இதனால் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படாலம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

இது சுற்றுலாப்பயணிகளுக்கு ஏமாறம் அளித்துள்ளது.