சென்னை

இன்று சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பருவமழை தற்போது குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு – மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (22-11-2023) முதல் நாளை மறுதினம் (24-11-2023) வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை 2-வது நாளாக விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  இன்றைய காலை நிலவரப்படி தற்போது வரை பரவலாக மிதமான மழை மட்டுமே பெய்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.